Premium WordPress Themes

Saturday, 23 April 2011

மெக்டொனால்ட்டில் இரண்டு சிறுமிகளால் ஒரு சிறுமி கொடூரமாகத் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!

மெக்டொனால்ட் உணவகத்தில் சிறுமி ஒருவர், இன்னும் இரண்டு சிறுமிகளால் மோசமாகத் தாக்கப்படும் காட்சி கமராக்களில் பதிவாகியுள்ளது. 

இந்த மோதலைத் தடுப்பதற்கு அங்கிருந்த ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 

ரொஸ்டேல் பல்டிமோர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் தாக்கப்ட்டவர் வெள்ளை இனச் சிறுமி. தாக்கியவர்கள் இருவரும் கறுப்பினத்தவர்கள். 

பல நிமிட நேரம் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதல் இடம்பெற்ற போது ஊழியர்கள் அதை எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சிரித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துள்ளனர். 

 

இந்தச் சிறுமி தாக்குதல் நடத்தியவர்களால் தரையில் இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் மீண்டும் தலையில் தாக்கப்பட்டுள்ளார். 



தாக்குதலை நடத்தியவர்கள் 14 மற்றும் 18 வயதானவர்கள் என்று தெரியவந்துள்ளது. 



இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


0 comments:

Post a Comment