Premium WordPress Themes

Saturday, 23 April 2011

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை நீடிக்கும்,சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 14 செ.மீ., காஞ்சீபுரத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று இரவு மழை பெய்து ஓய்ந்திருந்த காட்சிகள் காணொளியாக...
 

0 comments:

Post a Comment