Premium WordPress Themes

Wednesday, 26 October 2011

ஏழாம் அறிவு விமர்சனம்..


படத்தின் நிறை குறைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்... ஏழாம் அறிவு படத்தில்... பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்... கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல...வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!
படத்திற்கு வருவோம்... தற்காப்புக் கலையான குங்ஃபூவில் சிறந்து விளங்குவது சீனா. இந்த கலையை சீன மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர் என்பவர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் போதிதர்மர் ஒரு தமிழர்.

பாரம்பரிய கலைகளை நாம் மறந்துவிட்டோம்... ஆனால் ஒரு தமிழன் கற்றுக்கொடுத்த கலை அறிவை வைத்தே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க துணிந்து விட்டான் சீனாக்காரன்... இந்த சிக்கலை எப்படி சமாளிக்கபோகிறோம் என்ற கற்பனைக் கலவையே ஏழாம் அறிவு.
கி.பி 6ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை. பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தோங்கியது. தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் ‘போதி தர்மர்’ (போதிதர்மராக அறிமுகமாகிறார் சூர்யா).
அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தையும் கலை, மருத்துவம், எதிரில் இருப்பவரை தன் வயப்படுத்தும் வர்மக்கலை போன்ற கலைகளை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் போதி தர்மர்.
போதிதர்மர் சீனா சென்றிருந்த நேரம், சீனா பயங்கரமான தொற்று வியாதியால் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து சீன மக்களை காப்பாற்றுகிறது போதிதர்மரின் மருத்துவம்.

இதனால் அப்பகுதி மக்களால் தெய்வமாகவே வணங்கப்படுகிறார் போதிதர்மர். அப்பகுதி மக்கள் எதிரிகளால் தாக்கப்படும் போதும் தன் வர்மக் கலைகளை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார்.
சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீன மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். கலை, மருத்துவம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் போதிதர்மர்.
அவர் மீண்டும் தன் தமிழகம் திரும்ப விருப்பப்பட்ட போதும், போதிதர்மரின் உயிர் சீன மண்ணில் பிரிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பியதால் அவர்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உண்டு அங்கேயே தன் உயிரை விடுகிறார் போதிதர்மர்.
பையோ வார் ( உயிர் போர் ) பற்றிய விஷயங்களை நம் தமிழ்படமான ‘ஈ’ படத்தில் பார்த்திருப்போம். ஏழாம் அறிவு படத்தில் இந்தியாவை தாக்க சீனா ரெட் என்கிற பையோ வார் பிளானில் இறங்குகிறது.
அதன் தொடக்கமாக சீனாவை சேர்ந்த டோங்லி ( படத்தின் வில்லன் ) என்றவன் தமிழ்நாட்டுக்கு வருகிறான். அரவிந்த் ( சூர்யா ) சென்னையில் நடக்கும் பாம்பே சர்க்கஸ் கம்பனியில் வேலைபார்க்கும் சர்க்கஸ் கலைஞர்.
சர வெடியாக வெடிக்க இருந்த ‘ரிங்க ரிங்கா’ பாட்டு ஊசி வெடியாக மாறிவிட்டாலும்... அதில் சூர்யாவின் சாகசங்களும், அதைவிட மற்ற சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களும் பலே! ரெட் ஆபரேஷனை தமிழகத்தில் தொடங்க டோங்லி வந்துவிடுகிறான்.
வந்ததும் அவனது முதல் வேலை, சுபாவை (ஸ்ருதிஹாசன்) கொலை செய்வதுதான். ஏன்? மறபியல் பொறியாளராக சுபா (ஸ்ருதிஹாசன்). பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர் போதிதர்மர்.
இப்போது உலகில் பல விளங்க முடியாத நோய்கள் வர தொடங்கிவிட்டது. போதிதர்மரின் டி.என்.ஏ.வை எடுத்து ஆராய்ச்சி செய்து, அதே விதமான டி.என்.ஏ-வை போதிதர்மரின் பரம்பரையில் யாருக்காவது இருக்கும்.
போதிதர்மரின் டி.என்.ஏ.வை இவருக்கு பொருத்தினால், போதிதர்மரின் கலை, மருத்துவ அறிவு மீண்டும் உலகத்துக்கு கிடைக்கும் என்பது தான் சுபாவின் ஆராய்ச்சி.

(இந்த டி.என்.ஏ மேட்டர் Assassin's Creed என்ற ஆங்கில படத்தில் இருந்து உருவப்பட்டதாகவே சொல்லப்படுகிறது...) சுபாவின் ஆராய்ச்சி விஷயங்களை காசு வாங்கிக்கொண்டு சீனாவுக்கு தெரியப்படுத்துபவர் சுபாவின் பேராசிரியர் ரங்கராஜன்... இந்த சகுனி வேலையால் தான் வில்லன் டோங்லி தமிழ்நாட்டுக்கு வந்து புது வைரஸ் கிரிமியை பரப்பியதோடு... சுபாவை கொல்ல முயர்ச்சி செய்கிறான்.
போதிதர்மர் பரம்பரையில் வந்தவர் சர்க்கஸ் கலைஞராக இருக்கும் அரவிந்த். அரவிந்தை வைத்து அவருக்கும் தெரியாமலே ஆராய்ச்சியை தொடர்கிறார் சுபா.
சுபாவின் பழக்கத்தை காதலாக எடுத்துக்கொண்டு, அது இல்லை என்ற பின் ரெயில்வே ட்ராக்கில் யம்மா யம்மா சோகப்பாட்டுப் பாடி பின் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தெரிந்து சுபாவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் அரவிந்த்.
போதிதர்மரின் திறமைகள் திருப்பவர... விளைவுகளை சந்திக்கிறான் வில்லன் டோங்லி! படத்தின் முதல் பாதியில் பல பிரம்மாண்ட காட்சிகளோடு, நாம் அறியாத பல தகவல்களை சொன்னாலும்... பார்வையாளனுக்கும் படத்துக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இல்லாமலே போய்விடுகிறது.
முதல் பாதியில் பழையகால சீன கிராமத்தை காண்பிக்க உழைத்தவர்களுக்கு சபாஷ்! போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி இசையும் இதம். சூர்யாவின் வர்மக்கலை வித்தைகளும் ஹீரோயிஸம் கலந்ததாகவே பிரம்மிப்பூட்டியது.
ஆனால் முதல் பாதியில் சூர்யாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிற ரொமான்ஸ் காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்து பழைய ஸ்டைல். அந்த யானை சவாரி ரொமான்ஸ் காட்சி புதுசு.
காதல் தோல்வி என்று யம்மா யம்மா பாடலில் சூர்யா உருகி உருகி பாடுகிற அளவுக்கு அதற்கு முன்பு இருந்த காதல் காட்சிகள் உருக்கமானதாக அமையவில்லை என்பதே உண்மை.
முதல் பாதியிலும் க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்தும் ஹிப்னாடிஸம் ( நோக்கு வர்மம் - எதிரில் இருப்பவர்களை தன் வசம் வசீகரப்படுத்துவது ) என்கிற கலையை வைத்துதான் சண்டை போடுகிறார் வில்லன்.
ஹிப்னாடிஸம் கலையை உணர்ந்தவர்களாகவே இருந்தாலும், அதை படமாக்கிய விதம் எதோ காமெடித்தனமாகவே இருக்கிறது.
இரண்டாம் பாதியில் லாரி முதல் கார், ஆட்டோ எல்லாம் ரவுண்டுகட்டி பறப்பது தயாரிப்பாளரின் பர்ஸை காலி செய்ததைத் தவிர பிரம்மாண்டம் எதுவும் இல்லை... வீடியோ கேம்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.
தமிழ் மொழியை குரங்கு என்று ஒருவர் சொல்லிவிட அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சிக்கு வந்த அபாரமான கைதட்டல், இன்னும் நாம் உணர்வுள்ள தமிழர்களாய் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது.
வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம் என்ற வசனங்கள் நச்! வசங்களோடு நில்லாமல் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கும் கைதட்டல்! வில்லனிடம் போனில் கண்ணீர்விடும் காட்சியில் ஸ்ருதி பின்னிட்டார்.
வில்லன் நடிகர் ஜானி ட்ரி, பார்வையில் மிரட்டுகிறார். க்ளைமக்ஸ் காட்சியில் தான், நிமிர வைக்கிறார் இயக்குனர். பீட்டர் ஹென் அசாத்தியமான சண்டைக்காட்சியாகவே அதை உருவாக்கி இருக்கிறார்.
அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது. ரவி கே.சந்திரனின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் இயக்குனர் சொன்ன சொல் கேட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
இன்னும் என்ன தோழா... பாடலை வீணடிப்பார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம். நல்லவேளை படத்தின் பின்புலத்தில் வைத்து மகிழ்ச்சி.
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் முன்னந்தி சாரல்..., யம்மா யம்மா..., அவருக்கே உரிய மெலடி ஸ்டைல். ஓரிரு பாடல்கள் அவர் படத்தின் பாடல்களை அவரே ரீமிக்ஸ் செய்தது போல ஒரு உணர்வு.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், கருத்துக்களை கமர்ஷியல் கலவையோடு சொல்வது போலவே இருக்கும். இதில் கருத்துக்கள் நிறைய இருந்தாலும், கமர்ஷியல் கலவைகள் சரியில்லை.
இந்தக் கூட்டணியில் இன்னொரு கஜினியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே! எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதைவிட மேலே மேலே மேலே இருக்கும் என்று சொன்னார் இயக்குனர். உண்மையை சொன்னால் அவர் சொன்னதை வைத்து எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் கீழே தான்!

வேலாயுதம் விமர்சனம்

இந்திய சினிமா வரலாற்றில்,தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் ஜெயம் ராஜா,விஜய், மற்றும் தெலுங்கு சினிமா வரலாற்றில் கூட இந்த மாதிரி ஒரு படம் வந்தது கிடையாது.அதற்கு உதாரணம் தான் இந்த படம். ராஜா கோடு மேல கோடு போட வச்சிருந்த பென்சில் உடைஞ்சி காணாமப் போயிருச்சாம். அதனால முதல் தடவையா சொந்தமா யோசித்து படம் எடுக்கிறாராம்.

ஜெனிலியா ரொம்ப புத்திசாலி (விஜய் கிட்ட இருக்கும் போது மட்டும் முட்டாள்) பத்திரிக்கை நிருபரா வேலை செய்கிறார்.பசுபதி அந்த ஊர்ல தாதா.ஆனா பகவத் கீதை பாக்குற எல்லோருக்கும் உபதேசம் பண்ணுவார். அவரோட உண்மையான முகம் ஜெனிலியாவுக்கு மட்டும் தான் தெரியும்.(பின்ன ஒரிஜினல் படத்துலையும் கதை அப்படித்தான் போகுது). அப்படியிருக்கும் போது ஒரு வெடிகுண்டு விபத்துல பசுபதியின் ஆட்கள் சாக அதை வைச்சது வேலாயுதம் தான் என்று துண்டுச்சீட்டுகள் மூலம் வதந்தி பரப்புகிறார்.

அப்படியே கட் பண்றோம்.இது எதுவும் தெரியாம அத்தைப் பொண்ணு,அம்மா என்று சந்தோஷமாக ஆடல் பாடல் ஊரே மதிக்கும் ஒருவராக கிராமத்தில் வாழ்கிறார் விஜய்.(மதிக்காம மிதிச்சா கொஞ்சம் நல்லாயிருக்கும்).இப்போ விஜய் ஜெனிலியா,பசுபதி இருக்கிற ஊருக்குப் போக ஒரு காரணம்.அதுக்கு இட்டாங்கடா அந்த தங்கச்சி சரண்யாவ. தங்கை இருந்தா போதுமா.சிட்டிக்கு எப்படி போக. கல்யாணம் பண்ணுங்கடா. கல்யாண நேரத்துல எப்படிடா சிட்டிக்கு போகுறது. தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு சிட்பண்ட்ல பணம் போட்டியிருக்காரு விஜய்.அதுவும் ரவுடி இருக்கிற சட்டியில தான் அகப்பை போட முடியும்.பணத்தை எடுக்க அந்த ஊருக்கு போக.

அப்ப பாத்து ஊர்ல நிறைய இடத்துல குண்டு வெடிக்க அந்த இடத்துல எல்லாம் விஜய் ஜஸ்ட்ல மிஸ் ஆகுறார். எப்படின்னா குண்டு அவர் செருப்பு பக்கத்துல வெடிக்கும்.இங்க யார்டா பொட்டு வெடி வெடிச்சதுன்னு கேக்காம எஸ் ஆயிருவாரு. அப்ப பாத்து கோவில் அர்ச்சகர் உங்க பெயர் என்ன அப்படி கேக்க(அப்பத்தானே வேலாயுதம் பெயர் எல்லோருக்கும் தெரியும்).அதே மாதிரி விஜய் சொல்ல ஆபத்பாந்தவர் வந்துட்டார் அப்படி மக்கள் பில்டப் கொடுக்கிறாங்க.(அதே மாதிரி தான் தியேட்டர்ளையும் சொல்வாங்க). ஜெனிலியா வந்து நீங்க தான் அதுக்கு சரியான ஆள்னு சொல்ல நான் அதுக்கு சரி வர மாட்டேன்னு விஜய் சொல்ல (எதுக்குப்பா அதை சொல்வீங்களா..இல்ல வடிவேலுக்கு சொல்லாம விட்ட மாதிரி இருந்துருவீங்களா) ஜெனிலியா நீங்க தான் அதுக்கு சரியான் ஆள்னு சொல்றாங்க.

இப்படி எல்லாம் சொன்னா விஜய் கேப்பாரா. சிட்பண்ட்ல பணத்தை ஏமாத்துறாங்க. ஜெண்டிமேன், இந்தியன்,அன்னியன்,சாமுராய், ரமணா, இன்னும் வர்ற போற சங்கர் படம் மாதிரி இவரு பணம் போன உடனே பொங்குறாரு.பொங்குறாரு.லாஜிக் இடிக்குமே.சரி இப்படி வைப்போம்.பணம் போனதால மக்கள் எல்லாம் தற்கொலை செய்ய பொங்கி எழுந்து மாஸ்க்கைப் போட்டுகிறார். அழிக்கிறார்.

நடுவுல விஜய் தங்கச்சி கல்யாணம். விஜய் மேல சந்தேகம் வந்து வில்லன் குண்டு வைக்க இவர் சாகாம சரண்யா காலி. லேசா முகம் தெரிஞ்ச காரணத்துனாலத்தான் இங்கே வந்துட்டாங்க அப்படி சொல்லி ராவோடு ராவாக இன்னொரு மாஸ்க் தைக்கிறார். அப்படியே கிளம்பி எதிரிகளை அழிக்கிறார். அப்பத்தான் ஒரு உண்மை தெரியுது பசுபதி இந்து இல்ல இந்தியாவை இழிக்க (சாரி ஒரு ரைமிங் வரட்டுமே என்று சொல்லி விட்டேன்) அழிக்க வந்த முஸ்லீம் (கொய்யால இதையாவது மாத்துங்க). உடனே துவம்சம் பண்ணி இந்தியாவை காப்பாத்தி விட,ஜெனிலியா,ஹன்சிகா இருவரும் விஜய்க்காக போட்டி போட எனக்கு கோட்டி கிழிய..



இந்தியா முழுக்க ரசிகர்கள் படத்தை கொண்டாட வருங்கால பிரதமர் என்று போஸ்டர் அடித்து விடுகிறார்கள்.இது தெரிந்து ஒபாமா கூட்டணிக்கு விஜயைக் கூப்பிடுகிறார். எனக்கு சூலாயுதம் படம் நடிக்க வேண்டும். பெயரும்,ஹீரோயின்,இயக்குனர், தயாரிப்பாளர் தான் வேற.கதை அதே தான்.எனக்கு அது தான் முக்கியம் என்று சொல்லி விட்டு வர. தொல்லை தாங்க முடியாமல் ஒரு கேஸ் போடலாமா என்று ஆட்சியாளர்கள் யோசிக்கிறார்கள். ரசிகர்கள் (அவர் ரசிகர்கள் குறையாமலிருந்தால்) அடுத்த படமாவது நல்லா வந்து விடாதா என்று நப்பாசையோடு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றி பேசுகிறார்கள்.