Premium WordPress Themes

Thursday, 27 January 2022

மீண்டும் களமிறங்கும் ப்ரியங்கா, கதறும் மைனா.

மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள பிரியங்காவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக பிரியங்கா விளங்கி வருகிறார். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரியங்கா பிரபலமானார். மேலும், இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகும் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடுகிறார். அதுமட்டுமில்லாமல் பேட்டியும் கொடுத்திருக்கிறார். அதில் ரசிகர்கள் பலர் நீங்கள் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக எப்ப வரீங்க? என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள்.
அதற்கேற்றார் போல் விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள். ஆனல், பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்