நேற்று அல்ஜசீரா மற்று சனல் 4 தொலைக்காட்சிகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான நிகழ்ச்சியை ஒளிபரப்பியிருந்தது. இதன்போதே தமக்குப் புதிய ஆதராங்கள் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அவற்றில் இறுதி யுத்த காலத்தில் யுத்த பிரதேசத்தில் தங்கியிருந்த ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் பற்றிக் எதுவித தகவலும் இல்லை என குறித்துக் காட்டப்பட்டிருந்து.
குறிப்பாக அல்ஜசீரா தொலைக்காட்சி மக்களும் சக்தியும் எனும் தலைப்பில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விரிவாக 25 நிமிடங்கள் ஆராய்ந்திருந்தது.
இதற்காக அல்ஜசீரா நிருபர் இலங்கை சென்றிருந்தார். அவர் யாரையும் சுயமாக சந்தித்து செய்தி சேகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் இலங்கை சென்றதும், அவரால் சுயமாக எவரையும் சந்திக்க முடியவில்லை. அவர் கூடவே இராணுவமும் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அரச படைகளின் அனுமதியைப் பெற்ற, அவர்களால் அறிவுத்தப்பட்ட மக்களே நிருபரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என அதில் அந்நிருபர் குறிப்பிட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து உரையாடியிருந்தார் அல்ஜசீரா நிருபர். அதில் கோத்தபாய , போர்க் குற்றங்கள் தொடர்பில் புலிகள் மீதே குற்றஞசாட்டியிருந்தார்.
மேலும் அவர், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆதாரங்கள் பற்றிப் பேசிய நிருபரிடம் போர்க் குற்றம் தொடர்பான காணொளி ஆதாரங்களை இப்போது உள்ள நவீன வசதிகளைப் பயன்படுத்தி நீங்களே தயாரிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியசாலைகள் மீது இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக நிருபர் வினாவிய போது, தாங்கள் எந்த வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என அப்பட்டமாக பொய்யைச் சொன்னார் கோத்தபாய.
ஆனால், அல்ஜசீரா அவரது அந்த கருத்தின் பின் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை ஒளிபரப்பியிருந்தது.
நிருபருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் யாவரும் ஒருமித்த கருத்தாக தாங்கள் எந்தவொரு தமிழரையும் கொலை செய்யவில்லை என அப்பட்டமாக பொய்யுரைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்காக தமிழர் ஒருவரை இரகசியமாகத் தொடர்பு கொண்டிருந்தது அல்ஜசீரா. அவர் அதில் இலங்கை தமது போரின் போதான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவித்திருந்தாகத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை நேற்று சனல் 4 தொலைக்காட்சியும் இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டிருந்தது. அதில், இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது, வெளியுலகத் தொடர்புகளின் முகாம்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ளமை, அம்மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை தமக்குக் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இதேவேளை தமிழர் பிரச்சினையில் இந்த இரு தொலைக்காட்சி சேவைகளும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஜநாவின் அறிக்கை வெளிவரவுள்ள இந்நிலையில் இத் தொலைக்காட்சிகள் இரண்டும் புதிய ஆதாரங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அவற்றில் இறுதி யுத்த காலத்தில் யுத்த பிரதேசத்தில் தங்கியிருந்த ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் பற்றிக் எதுவித தகவலும் இல்லை என குறித்துக் காட்டப்பட்டிருந்து.
குறிப்பாக அல்ஜசீரா தொலைக்காட்சி மக்களும் சக்தியும் எனும் தலைப்பில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விரிவாக 25 நிமிடங்கள் ஆராய்ந்திருந்தது.
இதற்காக அல்ஜசீரா நிருபர் இலங்கை சென்றிருந்தார். அவர் யாரையும் சுயமாக சந்தித்து செய்தி சேகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் இலங்கை சென்றதும், அவரால் சுயமாக எவரையும் சந்திக்க முடியவில்லை. அவர் கூடவே இராணுவமும் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அரச படைகளின் அனுமதியைப் பெற்ற, அவர்களால் அறிவுத்தப்பட்ட மக்களே நிருபரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என அதில் அந்நிருபர் குறிப்பிட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து உரையாடியிருந்தார் அல்ஜசீரா நிருபர். அதில் கோத்தபாய , போர்க் குற்றங்கள் தொடர்பில் புலிகள் மீதே குற்றஞசாட்டியிருந்தார்.
மேலும் அவர், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆதாரங்கள் பற்றிப் பேசிய நிருபரிடம் போர்க் குற்றம் தொடர்பான காணொளி ஆதாரங்களை இப்போது உள்ள நவீன வசதிகளைப் பயன்படுத்தி நீங்களே தயாரிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியசாலைகள் மீது இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக நிருபர் வினாவிய போது, தாங்கள் எந்த வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என அப்பட்டமாக பொய்யைச் சொன்னார் கோத்தபாய.
ஆனால், அல்ஜசீரா அவரது அந்த கருத்தின் பின் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை ஒளிபரப்பியிருந்தது.
நிருபருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் யாவரும் ஒருமித்த கருத்தாக தாங்கள் எந்தவொரு தமிழரையும் கொலை செய்யவில்லை என அப்பட்டமாக பொய்யுரைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்காக தமிழர் ஒருவரை இரகசியமாகத் தொடர்பு கொண்டிருந்தது அல்ஜசீரா. அவர் அதில் இலங்கை தமது போரின் போதான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவித்திருந்தாகத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை நேற்று சனல் 4 தொலைக்காட்சியும் இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டிருந்தது. அதில், இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது, வெளியுலகத் தொடர்புகளின் முகாம்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ளமை, அம்மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை தமக்குக் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இதேவேளை தமிழர் பிரச்சினையில் இந்த இரு தொலைக்காட்சி சேவைகளும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஜநாவின் அறிக்கை வெளிவரவுள்ள இந்நிலையில் இத் தொலைக்காட்சிகள் இரண்டும் புதிய ஆதாரங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.










0 comments:
Post a Comment