Premium WordPress Themes

Wednesday, 13 April 2011

பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றிகள்! உணர்ச்சிவசப்படும் யாழ். பல்கலை விரிவுரையாளர் நவரத்தினம் (காணொளி, பட இணைப்பு)

பயங்கரவாதத்தை தோற்கடித்த ஜனாதிபதிக்கு நன்றி என்றும் அதனால் தான் இன்று நாங்கள் நிம்மதியாக சுதந்திரம் பெற்று வாழ்கிறோம் என்றும் ஜனாதிபதியை சந்தித்து தனது நன்றியறிதலைத் தெரிவித்துள்ளார் யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் கலாநிதி நவரத்தினம். 

சுற்றுலா சென்ற மாணவர்களை மிகவும் திட்டமிட்ட வகையில் தனது அரசியலுக்காக இவர் பயன்படுத்தியிருப்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே தனது இரண்டு பிள்ளைகளை விரிவுரையாளராக்கிய நவரத்தினம் ஏனைய இரண்டு பிள்ளைகளையும் விரிவுரையாளராக்கி பதவியையும் சுகங்களையும் அனுபவிப்தற்காகவே இந்த நாடகத்தை நடத்தியுள்ளார் என்று பல்கலைக்கழக தரப்பினர் கூறுகின்றனர். 
 
மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை தொடுப்பதிலும் காம விளையாட்டுக்களில் ஜாம்பவானான கலாநிதி நவரத்தினம் மாணவர்களின் கடும் எதிர்ப்புக்குள்ளான ஒருவர். சுவரொட்டிகள் வாயிலாக எச்சரிக்கப்பட்டவர். 

கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தை நன்கு திட்டமிட்டு அவர் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

புலிகளை அழித்தமைக்காக மஹிந்தருக்கு பொன்னாடை போர்த்திய அவர் நுண்கலைப்பீடம் சார்பானதாக குறிப்பிட்டுச் சரஸ்வதி சிலையை நினைவுப் பரிசாக கையளித்தார். 



ஜனாதிபதியின் முன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் பேசும் காட்சிகள் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன. 

வடக்கு கிழக்கில் சுகந்திரம் பிறந்து விட்டது என்றும் அதை ஜனாதிபதியே உருவாக்கியவர் என்றும் அதை சிங்களத்தில் உதவி விரிவுரையாளர் ஒருவரைக் கொண்டு வாசிக்க வைத்து மஹிந்தரை அப்படியே பூரிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார். 



ஜனாதிபதியை புகழ்ந்து பாடல்களை பாடிய புலவனும் பாணரும் என்று இவரை மாணவர்கள் ஏற்கனவே கிண்டல் செய்த நிலையில் அடுத்தபடியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இவரது நடவடிக்கை யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் கறை படிந்த நடவடிக்கை என்றும் தனது தனிப்பட்ட நலனுக்காக மாணவர்களை பலியாக்கியுள்ளார் என்றும் பல்கலைக்கழக சமூகம் விசனம் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி உட்பட அரச அரசியல்வாதிகளை சந்திப்பதை தவிர்த்து ஒதுங்கி கல்வி கற்கும் நிலையில் மாணவர்களை பலவந்தமாக இவர் சந்திக்க வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு முன்னால் அவரை மகிழ்ச்சிப்படுத்த மாணவர்களை இவர் பாடல் பாடவும் வைத்துள்ளார். 

புதிய துணைவேந்தரின் தெரிவுக்குப் பிறகு நடந்த இந்தச் சம்பவம் அவருடைய ஏற்பாட்டிலா நடந்தது என்று யாழ் பல்கலைக்கழக சமூகம் சந்தேகம் எழுப்பியுள்ளது? 

போர்க்குற்றங்களால் சர்வதேச ரீதியாக பல்வேறு அழுத்தங்களை சந்தித்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நடத்திய போர் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்றும் தமிழ் மக்களும் மாணவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்து ஜனாதிபதியை அங்கீகரிக்கின்றனர் என்றும் காட்டிக் கொள்ளவே இந்த சந்திப்பை அரசியல் உயர்மட்டங்களுடன் இணைந்து நன்கு திட்டமிட்டு விரிவுரையாளர் நவரத்தினம் நடத்தியுள்ளார் என்று கொழும்பு தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் உள்ள இசைத்துறையின் தலைவராக பதவி வகிக்கும் இவர் தனது இரண்டு பிள்ளைகளை அதே துறையில் விரிவுரையாளராக்கியுள்ளார். 

ஜனாதிபதியின யாழ் விஜயங்களின் பொழுது அவரை வரவேற்றுப் பாடும் பாடலை படிக்கும் பொறுப்பை வகித்து வருகின்றார். 

பல்கலைக்கழகத்தை தனது சுயநலன்களுக்காக பாவிக்கும் இவர் கடந்த காலத்தில் பல்கலைக்கழகத்தை குழப்ப பல நடவடிக்கைளையும் மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ், கொழும்பு தமிழ் சி.என்.என் இன் விசேட செய்தியாளர்கள் குழு)

0 comments:

Post a Comment