Premium WordPress Themes

Saturday, 16 April 2011

நிபுணர்குழுவின் அறிக்கை இரகசியமாக வெளியானதால் ஐ.நா விசனம்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியானதைத் தொடர்ந்து ஐ.நா விசனம் தெரிவித்துள்ளது. 

ஐ.நா சபையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட முன்னர் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட பிரதியினால் ஊடகங்கள் வாயிலாக கசிய விடப்பட்டுள்ளதாக ஐ.நா விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

ஐ.நா நிபுணர் குழு வழங்கிய அறிக்கையை ஐ.நா பொதுச்செயலாளர் ஆராய்ந்து வருகிறார். இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் இலங்கை ஜனாதிபதிக்கும் அறிக்கையின் பிரதியொன்று வழங்கப்பட்டுள்ளது. 

நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பதிலும் வெளியிடப்படும். 

ஆனால் இதற்கு முன்னர் இந்த அறிக்கையின் சில பகுதிகள் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றின் வாயிலாக வெளிவந்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் என ஐ.நா பொதுச்செயலாளரின் பணியகம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment