Premium WordPress Themes

Thursday, 14 April 2011

நீண்ட இடைவெளியின் பின்னர் சாந்தன் சுகுமார் ஒரே மேடையில்

நீண்ட இடைவெளியின் பின்னர் ஈழத்தின் முன்னணிப் பாடகர்களான சாந்தன் சுகுமார் ஆகிய இருவரும் ஒரே மேடையில் மக்கள் முன் தோன்றினர். 

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ்பாணம் நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற இன்னிசை நிகழ்விலேயே இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

சப்தஸ்வரா இசைக்குழுவின் இசையில் ஸ்ரீகுகன் இசைவழங்க ஈழத்தின் முன்னணி பாடகர்களான சாந்தன், சுகுமார் இருவரும் நேற்றைய மேடையில் பக்தி பாடல்களும் தத்துவ பாடல்களும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நீண்ட இடைவெளியின் பின் இருவரும் ஒரே மேடையில் நிகழ்சியினை நடத்திக் கொண்டு இருப்பதை அறிந்த ரசிகர்கள் பெருமளவில் கூடினர்.

0 comments:

Post a Comment