Premium WordPress Themes

Friday, 15 April 2011

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு 450 முன்னாள் புலி உறுப்பினர்கள் குடும்பத்தாருடன்.

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள ஏற்கனவே திருமணமான 450 முன்னாள் புலி உறுப்பினர்கள் குடும்பத்தாருடன் இணைக்கப்படவுள்ளனர். 

இது தொடர்பான அறிவித்தலை புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

வவுனிய கலாசார நிலையத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் ஏற்கனவே திருமணமான 450 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே குடும்பத்தாருடன் இணைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை புதுவருடத்தை முன்னிட்டு புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment