கடந்த எட்டு தினங்களாகக் காணாமல் போயுள்ள தனது ஐந்து வயது மகனை பேஸ்புக் மூலமாகத் தேடி வருகின்றார் மும்பையைச் சேர்ந்த ஒரு தந்தை.
பொலிஸார் இந்தச் சிறுவனைக் கண்டுபிடிக்க இதுவரை எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே தந்தை இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
பேஸ்புக் வழியாக யாராவது தனது மகன் பற்றியத் தகவலை தனக்கு வழங்க முடியும் என்று 37 வயதான ஆனந்த் ஷா என்ற இந்தத் தந்தை நம்புகின்றார். கார்னிட் என்ற ஐந்து வயதுச் சிறுவனே காணாமல் போயுள்ளான்.
http://www.facebook.com/pages/Missing-Boy-Karnit-Shah/203454529685688

ஏப்பிரல் மாதம் ஒன்பதாம் திகதி சிறுவன் பற்றிய விவரம் படம் என்பன பேஸ்புக்கில் தரப்பட்டுள்ளன. சிறுவனின் தந்தை மும்பாய் பங்குச் சந்தையில் பணிபுரிபவர்.
பொலிஸார் தனது மகனைக் கண்டுபிடித்துத் தரும் வரையில் தன்னால் பொறுத்திருக்க முடியாது என்றும் அதனாலேயே தன்னால் முடிந்த வரையில் தனது மகனைத் தேடும் பணியைத் தானும் தொடங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி மாலை தனது வீட்டுக்கு அருகில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
நீண்ட நேரம் தேடிப்பார்த்தப் பிறகு அன்றைய தினம் இரவு 9.30 அளவில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதுவரை எந்தத் தகவலும் இல்லை.











0 comments:
Post a Comment