பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந்தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடந்தது. மாநிலம் முழுவதும் மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 395 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 மாணவர்கள் தேர்ச்சி ஆனார்கள். இது 85.9 சதவீத தேர்ச்சி ஆகும்.
தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவ- மாணவிகளில் மாநில அளவில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி கே.ரேகா முதல் இடத்தை பிடித்தார்.
அவர் 1200-க்கு 1190 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் 4 பாடங்களில் 200-க்கு 200 எடுத்து சாதனை படைத்துள்ளார்.










0 comments:
Post a Comment