Premium WordPress Themes

Monday, 4 April 2011

இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்பு மட்டுமே நிர்வாணமாக நிற்பேன் - பல்டி அடித்த பூனம்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றால் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நிர்வாணமாக ஓடத் தயார் என்று மாடல் அழகி பூனம் பாண்டே அறிவித்தார். 

19 வயதாகும் இவர் இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த சிறந்த மாடல் அழகிகள் தேர்வில் முதல் 8 இடங்களில் ஒருவராக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பூனம் திடீரென நிர்வாணமாக ஓடத் தயார் என்று அறிவித்ததும் ஏராளமான வெளிநாட்டு பத்திரிகைகள் அவரை தொடர்பு கொண்டு, நிர்வாண போஸ் கொடுக்கும்படியும் கோடிக் கணக்கில் பணம் தருவதாகவும் கூறின. ஆனால் அவற்றை ஏற்க பூனம் மறுத்து விட்டார்.

பணம்-புகழ்க்காக நான் நிர்வாணமாக ஓடுவதாக சொல்லவில்லை. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அப்படி கூறினேன் என்றார். இதற்கிடையே பூனமுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தன் முடிவை மாற்றினார். இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிர்வாணமாக ஓடுவேன் என்றார். 

இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மாடல் அழகி பூனம் மீண்டும் பல்டி அடித்துள்ளார். எல்லார் முன்பும் நிர்வாணமாக நிற்க தயார் என்று நான் சொல்ல வில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்பு மட்டுமே நிர்வாணமாக நிற்கிறேன் என்று தான் கூறினேன் என்கிறார். பூனம் தன் மன மாற்றத்துக்கு புதுவிளக்கம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
இந்திய வீரர்கள் இறுதி போட்டியின் போது சிறப்பாக விளையாடும் ஆர்வத்தை தூண்டவே அவர்கள் முன்பு நான் நிர்வாணமாக நிற்க தயார் என்றேன். விளையாட்டு துறைக்கு மட்டு மல்ல, வேறு எந்த துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட நிர்வாண காட்சி உதவும். 

உலக அளவில் இது மருத்துவ ரீதியாக பல்வேறு பல்கலைக் கழகங்களால் ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இந்திய வீரர்கள் முன்பு அவர்கள் விரும்பும் இடத்தில், அவர்கள் டிரஸ்சிங் ரூமில் கூட நிர்வாணமாக நிற்க தயார் என்றேன். இது உளவியல் பூர்வமானது. இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாடல் அழகி பூனம் கூறினார்.

0 comments:

Post a Comment