பிரான்ஸ் நாட்டின் பாரிசின் புறநகர் பகுதியான லாகூர்நெவ்வில் அண்மையில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த கும்பலின் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பரிசியன் பத்திரிகை செய்தி வெளியட்டுள்ளது.
இலங்கை தமிழரான 20 வயதுடைய சந்தேகநபர் கடந்த புதன்கிழமை காலை நுவாசி லு கிறாண்ட் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞரை கோடாரியால் கொத்தியதைப் பலர் பார்த்ததாக சாட்சியமளித்துள்ளனர். இவரை பொலிஸார் நீண்டகாலமாக தேடிவருவதாக சென் சென்டனி பொலிஸார் தெரிவித்துள்ளனர் என இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளும் கைது செய்யப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தமிழரான 20 வயதுடைய சந்தேகநபர் கடந்த புதன்கிழமை காலை நுவாசி லு கிறாண்ட் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞரை கோடாரியால் கொத்தியதைப் பலர் பார்த்ததாக சாட்சியமளித்துள்ளனர். இவரை பொலிஸார் நீண்டகாலமாக தேடிவருவதாக சென் சென்டனி பொலிஸார் தெரிவித்துள்ளனர் என இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளும் கைது செய்யப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










0 comments:
Post a Comment