இலங்கை அரசு வன்னிப் போரில் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கைக்கு பாரிய நெருக்கடியை கொடுக்கப் போகிறது என நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நேற்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை விளக்க கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லிபியாவில் 5 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்காக மனிதாபிமானப் போர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ஐ.நா பாதுகாப்புச் சபை இலங்கையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது என்ற வினாவை எழுப்பக்கூடிய ஒரு ஆண்டாகவே 2011 ஆம் ஆண்டு அமையப்போகிறது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆண்டாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசைப் பொறுத்தவரை, தமிழீழம் ஒன்று தான் ஈழத்தமிழர்களுடைய அவலங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கhன ஒரே வழி என்பதை அனைத்துலக ரீதீயில் வலியுறுத்தி வருகிறது. பல நாடுகள் கொள்கை அளவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டமை தொடர்பான விடயங்கள் அனைத்துலக அரங்கில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படும் நிலை வரும் போது ஈழத்தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான வழி பிறக்கும்.
அதற்கான வேலைத்திட்டங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்படுவது ஆபத்தானது என்பது எனக்குத் தெரியும். இது தொடர்பான கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பேன் என்று கூறினார்.
லண்டனில் நேற்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை விளக்க கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லிபியாவில் 5 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்காக மனிதாபிமானப் போர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ஐ.நா பாதுகாப்புச் சபை இலங்கையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது என்ற வினாவை எழுப்பக்கூடிய ஒரு ஆண்டாகவே 2011 ஆம் ஆண்டு அமையப்போகிறது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆண்டாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசைப் பொறுத்தவரை, தமிழீழம் ஒன்று தான் ஈழத்தமிழர்களுடைய அவலங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கhன ஒரே வழி என்பதை அனைத்துலக ரீதீயில் வலியுறுத்தி வருகிறது. பல நாடுகள் கொள்கை அளவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் பாரிய இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டமை தொடர்பான விடயங்கள் அனைத்துலக அரங்கில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படும் நிலை வரும் போது ஈழத்தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான வழி பிறக்கும்.
அதற்கான வேலைத்திட்டங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்படுவது ஆபத்தானது என்பது எனக்குத் தெரியும். இது தொடர்பான கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பேன் என்று கூறினார்.










0 comments:
Post a Comment