ரஜினி சிங்கப்பூர் போனதிலிருந்து அவர் பற்றிய செய்திகளிலும் பெரிய அளவில் முன்னேற்றம்! எந்தளவுக்கு என்றால் செப்டம்பரில் ராணா ஷ§ட்டிங்கில் கலந்து கொள்வார் என்கிற அளவுக்கு. அவரது ரசிகர்களுக்கு அல்டிமேட்டான எனர்ஜி சூப் இதுதான் என்றாலும், சென்ட்டிமென்ட்டாகவே சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை மேலும் வலுவாக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.
கதைப்படி மூன்று ரஜினிகளில் ஒருவர் இறந்து போவது இருக்கிறதாம் ஸ்கிரிப்ட். சினிமாவில் கூட அவருக்கு அந்த முடிவு வந்துவிடக் கூடாது என்று நினைத்த கே.எஸ்.ரவிகுமார் இப்போது ரஜினி பிழைத்துக் கொள்வது போல மாற்றிவிட்டாராம்.
இந்த ஸ்கிரிப்ட் மாற்றத்திற்கு பிறகு எல்லாமே நல்ல தொடக்கமாக இருப்பது ஆச்சர்யம்தான். ஏனென்றால் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வந்த டயலாசிஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக வந்திருக்கிறது முதல் செய்தி.
இதற்கிடையில் இன்னொரு விஷயம். சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டிருக்கும் ஃபுளோரில் ஒரு இந்தியர் கூட வேலைக்காரர்களாகவோ, மேல்மட்ட ஊழியர்களாகவோ இல்லையாம். யூகத்தின் அடிப்படையில் வரும் செய்திகள் குறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.









0 comments:
Post a Comment