2012ஆம் ஆண்டிற்கான உலகில் அமைதி நிலவும் நாடுகளை தரப்படுத்தி வெளியிடப்படும் உலக அமைதிச் சுட்டெண்ணில் இலங்கை 110வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
162 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் இந்தியா 141வது இடத்தைப் பெற்றுள்ளது.
2011ஆம் ஆண்டைவிட இலங்கை ஆறு இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல், உள்நாட்டு முரண்பாடுகள், பயங்கரவாதம் உள்ளிட்ட பல விடயங்களை கணித்து வெளியிடப்பட்டுள்ள இந்த சுட்டெண்ணில் இலங்கை 2.3 புள்ளிகளைப் பெற்று 110ஆம் இடத்தை பெற்றுள்ளது.
இதேவேளை தெற்காசியாவிலேயே மிக அமைதியான நாடாக பூட்டான் முன்னிலையில் உள்ளது.
தெற்காசியாவில் அமைதியான நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தையும் இந்தியா ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment