Premium WordPress Themes

Friday, 14 June 2013

விடுதலை புலிகளின் நிறுவனங்களை அவதானிக்குமாறு ஜேர்மனியிடம் இலங்கை வலியுறுத்தல்!


ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறும் வகையில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகப்பு நிறுவனங்களை கூர்ந்து அவதானிக்கும்படி ஜேர்மனியிடம் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வேளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கைடோ வெஸ்ரவெலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கத்தின் பல முகப்பு நிறுவனங்கள் சமுதாய நிறுவனங்கள் என்ற போர்வையில் ஜேர்மனியில் இயங்குவதாக சுட்டிக்காட்டினார்.
இந்த குழுக்கள் பிரசாரத்துக்காகவும் நிதி சேகரிப்பதற்காகவும் பல பாடசாலைகளை நடத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது பற்றி விளக்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கு தான் விரும்பிய வகையில் தேவையான காலமெடுத்து அதனை செயற்படுத்தும் உரிமை உள்ளதென கூறினார்.
பெருமளவிலானோர் கலந்துகொண்ட வெளிநாட்டு கொள்கைக்கான ஜேர்மன் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பீரிஸ், இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் காணப்பட்ட புதிய போக்குகள் பற்றி பல பிரச்சினைகளை பிரஸ்தாபித்தார். புறவயமான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார். முனித உரிமைகள் தொடர்பில் காணப்பட்ட அண்மைய தலையீடுகளில் புறவயமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதா எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒரு நாடு கொண்டுவந்த போது அதற்கு ஆதரவு இருக்கவில்லை. இதனால், அதனை முன்னெடுக்க முடியாமல் இருந்தபோது வேறு ஒரு நாடு இந்த தீர்மானத்தை கொண்டுவந்தபோது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது எனவும் அமைச்சர் பீரிஸ் இதன்போது குறிப்பிட்டார்.

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பான iOS 7 வெளியீடு!

இன்றைய கணினி உலகில் ஜாம்பவனாக விளங்கி வருவது ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் புதுமையான பெற்று கொள்வதற்காக தயாரிப்புக்களை சர்வதேசமே இன்று காத்துக்கிடக்கிறது இந்த நிலையில் புதிய படைப்பை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
கணனி, கைபேசி என அனைத்திலும் உலகை ஆண்டு வரும் அப்பின் தனது அடுத்த படைப்பான iOS 7-யை வெளியிட்டுள்ளது.இதனையடுத்து அப்பிஸ் ஸ்டோர்களில் கூட்டம் கலைகட்டியதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இதில் உள்ள வசதிகள்:
1. Notifications
2. Calender Task
3. Facebook Audio Call
4. Multi Application Task
5. Newly Designed Maps
6. Smart Search Option
7. Auto Security Option
8. Multi Application in Single Screen

Wednesday, 12 June 2013

எங்கள் அரசியல் அபிலாஷைகளை 13வது திருத்தமோ, மாகாணசபை முறைமையோ பூர்த்தி செய்யப் போவதில்லை! சிறிதரன் பா.உ

தமிழர்கள் தனித்துவமான இனமாக, தனித்துவமான தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களது மிக நீண்டகால அரசியல் அபிலாஷை. எங்கள் அரசியல் அபிலாஷைகளை 13வது திருத்தமோ, அதன் கீழான மாகாணசபை முறைமையோ பூர்த்தி செய்யப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழர்கள் தனித்துவமான இனமாக, தனித்துவமான தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களது மிக நீண்டகால அரசியல் அபிலாஷை, அதற்காகவே தமிழினம் கடந்த 60வருடங்கள் மயிர்க்கூச்செறியும் அர்ப்பணிப்புக்களுடனும், தியாகங்களுடனும் பல்வேறு வழிகளில் போராடியிருக்கின்றது.
எங்கள் அரசியல் அபிலாஷைகளை எங்கள் உயிரினும் மேலானதாகவே நாங்கள் கருதியிருக்கின்றோம். அதனை வெறுமனே 13வது திருத்தமோ, அதன் கீழான மாகாணசபை முறைமையோ பூர்த்தி செய்யப்போவதில்லை. எனவே 13வது திருத்தத்தை தமிழ் இனப்பிரச்சினைக்கான தீர்வாக நான் ஒருபோதும் கருதவில்லை, கருதப்போவதுமில்லை.
தொடர்ந்து ஆட்சிக்கு வரும் சகல சிறீலங்கா அரசுகளாலும் திட்டமிடப்பட்டு, ஒருங்கமைக்கப்பட்டு அவற்றினது முழு அதிகாரங்களையும் வளங்களையும் பயன்படுத்தி கொலைகள் மூலமும் எமது கட்டுமானங்களை சிதைப்பதன் மூலமும் செயற்படுத்தப்பட்டு வரும் தமிழ் இன அழிப்பிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதுதான் எப்போதும் தமிழர் எங்களின் பிரச்சனை. இந்தக் கொடூரமான இன அழிப்பிலிருந்து தப்பித்து எப்போதும் தமிழ் இனமாக, தமிழ்த் தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் அபிலாஷை.
அதற்காகத்தான் கடந்த 60 வருடங்களாக நாங்கள் பல்வேறு வழிகளிலும் போராடி வருகின்றோம். எங்களது தேசிய இருப்புக்கான உயிரினும் மேலான இந்த ஆவலை 13வது திருத்தமோ, அதன் கீழ் வரும் மாகாண சபைத் தேர்தலோ, அதில் வெற்றி பெற்று நாம் அமைக்கக்கூடிய மாகாண சபையோ ஒரு போதும் சொற்ப அளவில்தானும் பூர்த்தி செய்யப் போவதில்லை. அதனால் 13வது திருத்தத்தை தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக நான் ஒரு போதும் கருதவில்லை.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் வழி உருவாகிய இந்த 13வது திருத்தம் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தேசத்தின் அபிலாஷைகளையும் நியாயமான அச்சங்களையும் சற்றேனும் கருத்திலெடுக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழருக்கு சாதகமான ஒரு சில சரத்துக்கள் கூட 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாது தமிழர்களுக்கு வாக்குறுதி வழங்கியபடி இந்திய அரசு ஒரு போதும் இந்த 13வது திருத்தம் தமிழரின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைய வேண்டும் என்பதற்காக எந்த முயற்சியையும் எடுத்ததுமில்லை, உறுதிப்படுத்தவுமில்லை.
1987ல் வரையப்பட்ட போதே இந்த 13வது திருத்தம் தமிழர் மீதான இன அழிப்பை தடுக்கக்கூடிய எந்த அதிகாரங்களையும் தமிழருக்கு வழங்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. மாறாக சில நிர்வாக பரவலாக்கங்களையே செய்தது. தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு மிக முக்கியமானது நிலம் அல்லது காணியாகும். ஆரம்பத்திலேயே இதன் கீழ் வழங்கியதாக காட்டப்பட்ட காணி அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரங்கள் முழுவதும் உண்மையில் ஜனாதிபதியிடமே வழங்கப்பட்டிருந்தன.
இப்படித்தான் மிக முக்கியமான அதிகாரங்களான சட்டம் - ஓழுங்கு (பொலிஸ்), நீதித்துறை, கல்வி, நிதி, அபிவிருத்தி என்பன அரைகுறையாக தமிழருக்கு பயனளிக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருந்தன. மேலும் வழங்கப்பட்ட சில அதிகாரங்கள் கூட ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநரிடமே வழங்கப்பட்டிருந்தன. அவர் விரும்பினால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையிடம் அந்த அதிகாரங்களை வழங்கலாம், வழங்காமலும் விடலாம்.
அதாவது சிறீலங்கா அரசு தனது இன அழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை பாதிக்கக்கூடிய எதுவும் 13வது திருத்தத்தில் (மாகாணசபை அமைப்பில்) வராதவாறு பார்த்துக்கொண்டது. பின்னர் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள், 17ம், 18ம் அரசியல் யாப்புத் திருத்தங்கள் மூலம் ஏலவே இருந்த ஒரு சில சிறிய அதிகாரங்களும் பறிக்கப்பட்டன.
1987க்குப்பின்னான காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச்சக்தியாக இருந்த வரை 13வது திருத்தத்தை பிரச்சனையின் தீர்வுக்கான அடிப்படையாக யாருமே பேசியதுமில்லை, கருதியதுமில்லை. சிறீலங்கா அரசாங்கங்களால் அமைக்கப்பட்ட மங்கள முனசிங்க ஆணைக்குழுவாகட்டும் சந்திரிகாவினால் 1995, 1997, 2000ம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களாகட்டும் அண்மையில் நடந்து முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டமாகட்டும்
ஏன் இறுதியில் நடந்த த.தே.கூ. – அரசு பேச்சு வார்த்தையாகட்டும் எல்லாவற்றிலுமே தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு 13க்கு அப்பாலான ஒரு தீர்வு தேவை என்பதை அடிப்படையாகக்கொண்டே பேசப்பட்டன.
ஆனால் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப்பின், தமிழர் தரப்பு பலவீனமடைந்து விட்டதாக முடிவெடுத்துள்ள சிறீலங்கா அரசும் சிங்களப் பேரினவாதமும் 13வது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்மொழியத் தொடங்கினார்கள். துரதிர்ஷ்ட வசமாக தோற்றுவிட்டோம் எனத் துவண்டுவிட்ட எமது மக்களும் தலைவர்களும் 13வது திருத்தத்தையாவது பெற்று விடமாட்டோமா என ஏங்கத்தொடங்கினர்.
மற்றும் எம்மவர் போல வேடமிட்டு எமது தோல்வி மனப்பான்மையை நிலை பெறச்செய்து எம்மை மீளா அடிமைகளாக்கிவிட கைக்கூலி பெற்று செயற்படும் புத்திஜீவிகளாக தம்மைக் கூறிக்கொள்பவர்கள் சிலரும் 13ஐ சர்வரோக நிவாரணியாகவோ அல்லது எமது பலவீன நிலையில் கிடைக்கக்கூடிய ஒன்று இது மட்டும்தான் என்றோ கூறி ஏமாற்றி வருகின்றார்கள்.
இப்படியான 13வது திருத்தம் எப்படி தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியும்? இதன் வழி உருவாகும் மாகாண சபை எப்படி தமிழரின் இன அழிப்பை தடுக்கும் (காணிப்பறிப்பைத் தடுக்கும், திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்கும்) அதிகாரங்களை எமக்குத் தரும். அதனால்தான் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் கூட எமது பிரச்சினைகளுக்கான தீர்வாகவோ அல்லது ஒரு இடைக்காலத் தீர்வாகவோ அமைய முடியாது.
அதே நேரம் 13வது திருத்தத்தின் கீழான வட மாகாணசபைத் தேர்தலில் வென்று அதைக் கைப்பற்றி, பின்னர் அதிலிருந்து கொண்டு போராடியோ அல்லது இரந்தோ மேலும் மேலும் அதிகாரங்களை சேர்த்து, அதிகரித்துக் கொண்டுபோய் தமிழருக்கு ஒரு நல்ல தீர்வையோ அல்லது சிலர் சொல்வது போல சமஷ்டி அமைப்பையோ எக்காலத்திலும் அடையவும் முடியாது. இப்போதுள்ள அரசியல் யாப்பிலும் 13வது திருத்தத்திலும் அதற்கான எந்த சட்ட அடிப்படைகளும், வாய்ப்புகளும் இல்லை என்பதை சட்டம் அறிந்த அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றார்கள்.
இந்த நிலையில் சிங்கள பேரினவாதிகளும் அவர்களைத் தூண்டி விடுகின்ற பேரினவாத மையமான அரசும் ஏதோ மாகாணசபைகளிடம் இருக்கும் அதிகாரங்கள் தமிழருக்கு பலமாகிவிடும் எனக் கூக்குரலிடுவதும் (இல்லாத, வெற்று) அதிகாரங்களை அகற்றிவிட்டுத்தான் வட மகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் எனக்கூறுவதும் நகைப்புக்கிடமானது.
ஆனால் இவர்கள் அறியாமையால் செய்வதல்ல இந்த ஆர்ப்பாட்டங்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். ஆனால் இப்படி எதிர்ப்புகள் உள்ளதாகக் காட்டிக் கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, சிங்களப் பேரினவாதிகள் எதிர்ப்பதால் 13வது திருத்தத்தில் தமிழருக்கு பயனுள்ளதாக ஏதோ உள்ளது என தமிழரை தவறாக நம்ப வைப்பது,
இரண்டாவதாக, இந்த 13வது திருத்தத்திலுள்ளதைச் செயற்படுத்தவே சிறீலங்கா அரசுக்கு இவ்வளவு எதிர்ப்பு உள்ளதால் இதற்கு மேல் எதையும் தமிழருக்கு வழங்குவது சிறீலங்கா அரசுக்கு மிகவும் கடினமானது என எம்மையும் சர்வதேசத்தையும் நம்ப வைப்பது,
மூன்றாவதாக இப்போது இருக்கும் சில அற்ப அதிகாரங்களையும் பிடுங்குவதன் மூலம் சிங்கள தேசத்தின் பேரினவாத மனதைக் குளிர்வித்து தாமே சிங்கள தேசத்தின் காவலர்கள் என்பதை தொடர்ந்தும் நிலை நிறுத்தவது என்பனவாகும்.
இந்த அரசோ, இனிவரும் சிறீலங்கா அரசுகளோ ஒருபோதும் மாகாண சபையை முழுமையாக ஒழிக்கா. ஏனெனில் ஐ.தே.க., சி.சு.க. போன்ற கட்சிகளின் 2ம், 3ம் நிலை அரசியல்வாதிகளுக்கு பதவிகளையும் சம்பளம், சலுகைகள் என வசதிகளையும் வழங்க இந்த அமைப்பே பயன்படுகிறது. தற்போது மாகாண சபைகளில் 200க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பதவியில் இருந்து கொண்டு பல வசதிகளை அனுபவக்கின்றனர்.
அவர்களில் திரு. விமல் வீரவன்ச அணியினரும் ஹெல உறுமயவினரும் கூட உள்ளனர். இவர்கள் தமது நலன்களை ஒரு போதும் தியாகம் செய்ய மாட்டார்கள். ஆகவே 13வது திருத்தத்துக்கு எதிரான இந்த எதிர்ப்புகளெல்லாம் ஒரு நாடகத்தின் காட்சிகள் எனவும் கூறலாம்.
ஆனால் எம்மவர் சிலர் அரசை நோக்கி மாகாண சபையின் அதிகாரங்களைப் பறிக்காதே என கெஞ்சுவதும் மிரட்டுவதும் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்து எனக் கூறுவதும் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதுவும் ஆரம்பத்தில் (அதாவது 1987ல்) இருந்த 13வது திருத்தத்தை மீளவும் கொண்டுவர வேண்டும் என கூறுவதும் மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
என்னைப் பொறுத்தவரை இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தம் உள்ளடங்கியுள்ளது. அதை அமுல்படுத்த வேண்டியது அந்த அரசியல் யாப்பினை பாதுகாப்போம் எனக் கூறுகின்ற அரசின் கடமை. அதை செய்வதும் செய்யாததும் அவர்களைப் பொறுத்தது. அந்த 13வது திருத்தத்தின் படி ஏனைய மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதைப் போல வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதும் அவர்களைப் பொறுத்தது.
மாகாண சபை முறைமையின் கீழ் எமக்கு ஒருபோதும் விடிவு ஏற்படப் போவதும் இல்லை. அதை வைத்துக்கொண்டு நாம் எதிர் நோக்குகின்ற இன அழிப்பை தடுக்கவோ, தணிக்கவோ முடியாது. அல்லது மாகாண சபையைப் பெற்றுக்கொண்டு மேலும் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியாது.
அதனால் 13வது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் தமிழரின் தேசிய ப்பிரச்சனைக்கு தீர்வாகவோ அல்லது ஒரு இடைக்காலத் தீர்வாகவோ அல்லது எதிர்காலத்தில் வளர்த்தெடுத்துப் பெற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்கான அடித்தளமாகவோ கருத முடியாது.
ஆனால் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் ஒன்று நடைபெறும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத் தேர்தலில் போட்டியிடும்.
ஏனெனில் தமிழரின் அரசியல் வெளிகளை அரசோ அல்லது சிங்களப் பேரினவாத்தின் ஏவலாள்களாக கேள்வியேதுமின்றி இன அழிப்புக்கு துணை போய்க்கொண்டிருக்கும், காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களோ கைப்பற்ற நாம் அனுமதிக்க முடியாது.
மேலும் புத்திக்கூர்மையுடன் செயற்பட்டால் பின்வரும் வழிகளில் வடக்கு மாகாண சபைத் தேர்தலினை நாம் ஒரு அரசியல் வேலைத்திட்டமாக செயற்படுத்த முடியும்.
  • நாம் எமது மக்களிடமிருந்து தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் ஒரு தடவை மிகத்தெளிவான ஆணையைப் பெற இத் தேர்தலை பயன்படுத்த முடியும். தமிழரின் தேசிய அபிலாஷைகளான தமிழருக்கு ஒரு தாயகம் உண்டு, தமிழர் ஒரு தேசம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்பவற்றை அடிப்படையாக ஏற்றுக்கொண்டு அவற்றைப் பாதுகாக்கக்கூடிய அதிகாரங்கள் உள்ள, தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய அதிகாரங்களைத் தரக்கூடிய ஒரு தீர்வே தமிழர்களின் அபிலாஷையாகும். அதற்கேற்றவாறான ஒரு காத்திரமான, வெளிப்படையான பிரகடனமாக தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் மக்களின் ஆணைக்காக முன்வைத்தல்.
  • தேர்தலில் நிற்பதற்கு வேட்பாளர்களாக தமிழ் மக்கள் மீதும் தமிழ்த் தேசியத்திலும் அசைக்க முடியாத பற்றுறுதியும், எதிரிக்கும் துரோகிகளுக்கும் தலை வணங்காத துணிவும், 13வது திருத்தம் எமக்கான தீர்வல்ல என்பதை கொள்கையாகவும் செயற்பாடுகளின் மூலமும் வெளிப்படுத்தக்கூடிய திறமையும், தமிழ்மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டக்கூடிய தலைமைத்துவ ஆற்றலும் தியாக சிந்தையும் உள்ள ஒற்றுமையாக அர்ப்பணிப்புடன் வேலை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்தல்.
  • இப்படியாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாணசபையின் த.தே.கூ. உறுப்பினர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் தமிழருக்கான முழுமையான ஒரு தீர்வை சர்வதேச ஆதரவுடன் பெறுவதை தமது இலக்காக கொண்டு மக்களை அணிதிரட்டி ஜனநாயக விழுமியங்களை மீறாது போராடுதல்.

கரையொதுங்கும் மீனவர்களின் சடலங்களால் பரபரப்பு! பலியானோர் 59 ஆக உயர்வு! ஆழ்கடலிலும் தேடுதல்



தென்னிலங்கையில் கடந்த சனிக்கிழமை வீசிய சூறைக்காற்றினால் காணாமற்போன 17 மீனவர்களின் சடலங்கள் நேற்றைய தினம் மட்டும் கரையொதுங்கியதால் பெரும் பரபரப்பு தொடர்கிறது.
கரையோர பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கடற்படையினர் தற்போது ஆழ்கடல் பகுதியில் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களில் நேற்று மட்டும் 17ற்கும் அதிகமான சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இதையடுத்து இந்த சூறைக்காற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 59 என கணிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அகுங்கல.அம்பலாங்கொட பிரதேசங்களில் 14 சடலங்களும், பம்பலபிட்டி தொடருந்து நிலைய கடற்கரையில் 2 சடலங்களும், பெந்தோட்டை பிரதேசத்தில் 1 சடலமும் கரையொதுங்கின.
ஒரேநாளில் பெரும் எண்ணிக்கையான சடலங்கள் கரைஒதுங்கியதை அடுத்து கரையோரப் பிரதேசங்களில் நேற்று பெரும் பரபரப்பு நிலை காணப்பட்டன.
இந்த அனர்த்தம் ஏற்பட்டு நான்கு நாட்களாகியுள்ள நிலையில் காணாமல் போயுள்ள எஞ்சியுள்ள மீனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
காணாமற்போனவர்களை தேடும் வேட்டையில் சிறிலங்கா விமானப்படையும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தினம் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் அமைதியான நாடுகளின் வரிசையில் பின் தள்ளப்பட்டுள்ள இலங்கை!

2012ஆம் ஆண்டிற்கான உலகில் அமைதி நிலவும் நாடுகளை தரப்படுத்தி வெளியிடப்படும் உலக அமைதிச் சுட்டெண்ணில் இலங்கை 110வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
162 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் இந்தியா 141வது இடத்தைப் பெற்றுள்ளது.
2011ஆம் ஆண்டைவிட இலங்கை ஆறு இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல், உள்நாட்டு முரண்பாடுகள், பயங்கரவாதம் உள்ளிட்ட பல விடயங்களை கணித்து வெளியிடப்பட்டுள்ள இந்த சுட்டெண்ணில் இலங்கை 2.3 புள்ளிகளைப் பெற்று 110ஆம் இடத்தை பெற்றுள்ளது.
இதேவேளை தெற்காசியாவிலேயே மிக அமைதியான நாடாக பூட்டான் முன்னிலையில் உள்ளது.
தெற்காசியாவில் அமைதியான நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தையும் இந்தியா ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.

Tuesday, 11 June 2013

அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு படகு மூழ்கியது! மீட்பு பணி தீவிரம்! இலங்கையர்கள் என சந்தேகம்!

அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மற்றும் ஒரு படகு விபத்துக்குள்ளாகியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த படகு விபத்துக்குள்ளான நிலையில் அது மூழ்கிக் கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
கொக்கோஸ் தீவுக்கு வடக்காக 257 கடல் மைல் தூரத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு மீட்புப் பணிகளுக்காக அவுஸ்திரேலிய அரசு கடற்படை படகுகளையும் ஹெலிக்கொப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
இதற்கு மேலாக இரண்டு விமானங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த படகில் பயணித்தவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதால் அனர்த்தத்தில் சிக்கியோர் இலங்கையர்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை எவருமே காப்பாற்றப்பட்டதாகவோ, சடலங்கள் மீட்கப்பட்டதாகவோ தகவல்கள் வெளிவரவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இதுவாகும்.

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!



மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைநெறி மாணவன் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக அழகியல் கற்கைநெறி 3ம் வருட மாணவனான யோ.அமிர்தராஜ் என்பவர் மீதே நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் காயங்களுக்குள்ளான மாணவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு கல்லடி பிரதேசத்திற்கு சென்ற இனந்தெரியாத சிலர் இவரை மிகமோசமாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சக மாணவர்கள், தாக்குதலுக்கு இலக்கான மாணவர் நாளை தினம் கிழக்குப் பல்கலைகழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைநெறி மாணவர் ஒன்றியத்தேர்தலில் தலைமை வேட்பாளராக போட்டியிடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

செக்ஸ் தளங்களில் இருந்து குட்டீஸ் க்கு பாதுகாப்பு

     
    உங்கள் குழுந்தைகள், இணையத்தை உலா வர உட்கார்ந்தால், உங்களுக்கு பகீர் என்கிறதா? அவர்கள் பார்க்க கூடாத இணைய தளங்கள் தப்பித் தவறி வந்துவிடப் போகிறதே என்று பதறுகிறீர்களா? ஏற்கனவே இந்த மலரில், இத்தகைய சூழலுக்கு சிறுவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் முறைகள் குறித்து, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர்கள் கொடுக்கும் பாதுகாப்பு வழிகள் குறித்து பார்த்துள்ளோம்.
அண்மையில், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கூடிய தேடுதல் தளம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.
அதன் இணைய முகவரி இது குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம்.
இந்த தளம் Google Custom Search மற்றும் Google Safe Search தளங்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இணையத் தேடலைத் தருகிறது. குழந்தைகள் காணக்கூடாத தளங்களின் பட்டியலைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு, அவற்றை விலக்கி, பார்க்கக் கூடிய தளங்களில் உள்ள தகவல்களை மட்டும் தருகிறது. குழந்தைகள் ஆர்வம் காட்டும் விஷயங்கள் குறித்த தளங்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது.
இதில் உள்ள Parents பிரிவில் நாம் இத்தளத்தின் இயங்கு தன்மை குறித்து அறியலாம். மேலும் இணையப் பாதுகாப்பு குறித்து பல குறிப்புகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தினை ஹோம் பேஜாக மாற்றுவதற்கும் வழி தரப்பட்டுள்ளது. இதில் தந்துள்ள குறிப்புகள் மற்றும் வழி காட்டுதல்களைப் பின்பற்றி செட் செய்துவிட்டால், உங்கள் குழந்தைகள் இந்த தளத்தினைப் பயன்படுத்தி, அவர்கள் தேடலை மேற்கொள்ளுமாறு செய்திடலாம்.
மற்ற பிற தேடுதலுக்கான தளங்களைப் போலவே இதுவும் செயல்படுகிறது. ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பான தேடலை மட்டுமே தன் முதல் நோக்கமாக வைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு சிறுவன் dinosaurs குறித்து அறிய, அந்த சொல்லை, இந்த தளத்தின் தேடல் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டியவுடன், குழந்தைகளை மனதில் கொண்டு டினோசார் குறித்து தகவல்களைத் தரும் தளங்களின் பட்டியல் மட்டுமே காட்டப்படும்.
இந்த தளத்தில் சிறுவர்களுக்கான கேம்ஸ், தகவல் பக்கங்கள் மற்றும் வண்ணம் தீட்டி மகிழப் பக்கங்களும் தரப்பட்டுள்ளன. ஒருமுறை இதனைப் பார்த்துவிடுங்கள்.
kidss