
முன்னால் உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யாராய் அம்மா ஆகப்போகிறார்.இந்த தகவலை அமிதாப் பச்சன் நேற்று உறுதிப்படுத்தினார்.”நான் தாத்தா ஆகப் போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.
இதுகுறித்து அமிதாப் தனது டிவிட்டர் இணையதள பக்கத்தில் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் அமிதாப் கூறியுள்ளார்.
மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட டிவிட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் அமிதாப் கூறியுள்ளார்.









0 comments:
Post a Comment