தன் 13 வயது மகளின் கன்னித் தன்மையை, நாலரை லட்ச ரூபாய்க்கு விலை பேசிய தாய், தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில், சால்ட் லேக் நகரில் வசித்து வந்தவர் பெலிசியா மெக்ளூர், 32. இவருக்கு, 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.பெலிசியா தனது மகளின் கன்னித் தன்மையை விற்று, அதன் மூலம் பணம் சம்பாதிக்க எண்ணினார். அதனால் அவர், டான் என்ற ஒரு நபரிடம் தொடர்பு கொண்டார். அவரும் அதற்குச் சம்மதித்து, விலை பேசினார்.பேரத்தின் இறுதியில், பெலிசியா, தனது மகளின் கன்னித் தன்மைக்கு, நாலரை லட்ச ரூபாய் பெற்றுக் கொள்ள, ஒப்புக் கொண்டார். இந்நிலையில், சிறுமியை ஆபாசமாகப் படம் எடுத்த பெலிசியா, அந்தப் புகைப்படங்களை, வில் என்ற நபரிடம் கொடுத்தார். அவரிடமும் தன் மகளை விற்க, சம்மதம் தெரிவித்திருந்தார்.
இதையறிந்த டான், இரு அடியாட்களை விட்டு, அந்தச் சிறுமியைத் தூக்கி வரச் செய்தார். ரகசிய வீட்டில் சிறுமியை அடைத்த அவர், தோலால் செய்யப்பட்ட உள்ளாடைகளை சிறுமிக்கு அணிவித்து, போட்டோ எடுத்தார்.பெலிசியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்த அவரது காதலன், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். பெலிசியாவைக் கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டனர். நடந்ததை பெலிசியா ஒப்புக் கொண்டார். கோர்ட்டில், நீதிபதி சிறுமியிடம் விசாரித்த போது, தாய்க்குப் பயந்து, அவரது நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும், உண்மையில் தனக்கு சம்மதம் இல்லை என்றும் தெரிவித்தார்.இதையடுத்து, குழந்தைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பெலிசியா, சால்ட்லேக் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்றே கால் கோடி ரூபாய் கொடுத்தால் தான், அவருக்கு ஜாமின் கிடைக்கும் என, கோர்ட் கூறிவிட்டது.









0 comments:
Post a Comment