Premium WordPress Themes

Saturday, 19 March 2016

ஹரிஷ்ணவியின் படுகொலை;சந்தேகநபரின் இரத்த மாதிரியை மரபணு பரிசோதனைக்கு.

வவுனியா – விபுலானந்தா வித்தியாலய மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார்.
விபுலானந்தா பாடசாலையில் கல்விகற்றுவந்த 14 வயதுடைய உக்குளாங்குளத்தைச் சேர்ந்த ஹரிஷ்ணவி என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டவாறு அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பாலசிங்கம் ஜனதன் என்ற நபரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரின் இரத்த மாதிரியை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் மன்றில் அறிவித்தனர்.
அதேவேளை மாணவி ஹரிஷ்ணவியின் கொலை தொடர்பில் அவசர மரண விசாரணையை நடத்திய அதிகாரி எஸ். கிஷோர், நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கையின்படி மாணவி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய வழக்கு விசாரணையின்போது சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி ஒருவர் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர்  தக்வா நகர் கிராமத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதையுடைய எம். அப்துல் றஸ்ஸாக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிணற்றுக்கு நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது  அவர் ஏற்கனவேஉயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2015 G.C.E. O/L பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது

2015 G.C.E. O/L பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது. http://www.doenets.lk என்ற இணையத்தில் பார்க்கவும்.