Premium WordPress Themes

Sunday, 9 October 2011

சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் செக்ஸ் அதிகாரி! பகீர் தகவல்கள் அம்பலம்


இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் உள்ள காமவெறி பிடித்த அதிகாரி ஒருவரின் செக்ஸ் தொல்லைகள் தாங்க முடியாத அளவுக்கு எல்லை மீறிய வண்ணம் உள்ளன.
குறித்த அதிகாரியின் செக்ஸ் தொந்தரவினால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்களினால் நேரடியாக வழங்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் தமிழ் சி.என்.என் இன் விசேட புலனாய்வுச் செய்திப் பிரிவு விசாரணையினை மேற்கொண்டது.
இந்திய வம்சாவழித் தமிழர் போல பேசக் கூடிய குறித்த அதிகாரி துணைத் தூதரக அலுவலகத்துக்கு வரும் பெண்களை செக்ஸ் வலையில் வீழ்த்த புது உத்தியை கையாண்டு வந்துள்ளார்.
குறித்த அலுவலகத்துக்கு அனேகமானோர் கடவுச்சீட்டு புதுப்பித்தல், கடல்வழியாக அகதியாக வந்து புதிய கடவுச்சீட்டு வாங்குவதற்காகவுமே வருகின்றனர்.

இவ்வாறு வருபவர்கள் குறிப்பாக பெண்களிடம் "இது செய்ய முடியாத காரியம்", "இலங்கையில் நீ எங்கு இருந்தாய்?", "இந்தியா வர யார் உதவினார்கள்" என்பது போன்ற விசாரணைப்பாணியில் கேள்விகளை கேட்டு கொடுக்கி போட்டு அவர்களை முதலில் பயமுறுத்துவார்.
பின்னர் நான் உங்களைக் கவனித்துக்கொள்கிறேன், உங்களின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்துவிட்டுப் போங்கோ, தேவைப்படும் போது போன் பண்ணுகிறேன் என்று கூறி நம்பர் வாங்கி விட்டு அனுப்பி விடுகிறார்.
இரவு பத்து மணி, பன்னிரண்டு மணிக்கெல்லாம் போன் செய்து குறித்த பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பது இவரது புதிய பாணி.
இரவு 12 மணிக்கு போன் பண்ணி பாஸ்போர்ட்டில சந்தேகம் கேட்கிறாராம். அதுவும் கணவன் வெளிநாட்டில் உள்ள பெண்களையும், கணவரே இல்லாத விதவைப் பெண்களையும் குறி வைத்தே இவர் தனது வலையில் வீழ்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
காம வெறி பிடித்த குறித்த அதிகாரிக்கு அலுவலக நேரமில்லாத அதுவும் பின்னிரவு நேரத்தில் தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி பாஸ்போர்ட் தொடர்பாக பேச வேண்டிய தேவை தான் என்ன?
இந்நடவடிக்கைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் இரு மாதங்களுக்கு முன்னர் எம் கவனத்துக்கு கொண்டுவதை தொடர்ந்து தகுந்த ஆதாரம், மற்றும் மேலதிக தகவல்களை திரட்டும் முயற்சியில் எமது விசேட புலனாய்வுச் செய்திப் பிரிவு களமிறங்கியது.
இதன்போது தான் பல பெண்கள் இந்த வகையில் பாதிக்கப்படிருப்பதும், தங்கள் அலுவலகத் தேவைகளை பூர்த்தி செய்ய அங்கு சென்று குறித்த அதிகாரியின் காம வலையில் மாட்டிக் கொண்டமையையும் அறிந்து கொள்ள முடிந்தது.
இப்படியான காமப் பிசாசுகளை எதற்காக துணைத் தூதரகத்தில் வைத்திருக்கிறார்களோ தெரியாது.
முள்ளிவாய்காலில் ஒன்றும் அறியா அப்பாவிப் பெண்களை கதறக் கதறக் கற்பழித்தது போல ஏழுகோடித் தமிழ் மக்கள் உள்ள தமிழ் நாட்டிலும் செக்ஸ் தொல்லைகளை ஆரம்பித்து விட்டனர் இந்த சிங்களத்தின் அடிப் பொடிசுகள்.
குறித்த விடயம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு ஈழத் தமிழ் பெண்களை குறித்த காம அதிகாரியிடம் இருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறித்த அதிகாரியின் செக்ஸ் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் அவர்கள் வழங்கிய தகவல்களின் குரல் பதிவுகள் எமது செய்திப் பிரிவின் வசம் உள்ளன.
குறித்த பெண்களின் பாதுகாப்புக் கருதி அவற்றை நாம் வெளியிடவில்லை.
ஆனால் காம வெறி பிடித்த குறித்த அதிகாரி தொடர்பான முழுமையான விபரங்களை விரைவில் எமது செய்தித்தளத்தில் எதிர்பாருங்கள்.....
-தமிழ் சி.என்.என் இன் சிறப்புச் செய்திப் புலனாய்வுப் பிரிவு-

0 comments:

Post a Comment